Wednesday, November 5, 2008

ஒய்யாரக் கொண்டை


கோடிகளைக் கொட்டி
குளிர்சாதன வசதியோடு
கோபுரமாய் எழுந்து நிற்கும்
கல்யாண மண்டபம்

லட்சங்களில் தோரணம் கட்டி
நோட்டுக்களால் கம்பளம் விரித்து
வாகனங்களால் நிரம்பி வழியும்
வரவேற்பு நுழைவாயில்

மிச்சம் வைப்பதையே அந்தஸ்த்தின்
உச்சம் எனக் கருதும்
தட்டை கையில் ஏந்திய
மேல்தட்டு மக்கள்
சாப்பாட்டு அறையில்

பட்டுச் சேலையில்
தொட்டுப் பேசாத
நாகரீக நங்கைகள்
நவீன மணமேடையில்

ஒட்டு சேலையில்
பட்டினியோடு
எல்லோருக்கும்
சமைக்கும்
சமையல்காரி
சமையலறையில் .

No comments: