Wednesday, November 12, 2008

என்ன தான் செய்யலாம் ?


அலுவலகத்தில் அல்லல்பட்டு
அமைதி நாடிவரும்போது
எள்ளும் கொள்ளும் வெடிக்கும்
அதிரடிப் படையாய்.,

சிறுதவறு செய்துவிட்டு
செய்தி கசிந்து மாட்டிக்கொண்டு
கலவரம் எதிர்பார்த்து
கதவு திறந்து மெதுவாய்
காலடிவைத்தால்
அமைதியே உருவான
சமாதானப் புறாவாய்.,

சந்தோசச் செய்தியோடு
ஆனந்த அதிர்ச்சி தர
துள்ளிக்கொண்டு முன்னால்
திடீரென போய் நின்றால்
அதிர்ச்சி தன்னையேத்
திருப்பித் தாக்கும்படி
கொந்தளிக்கும் கலக பூமியாய்.,

என்னதான் செய்வான் அந்த
ஏதுமறியாத அப்பாவிக் கணவன்

(பி.கு :எதிர்ப்பு தெரிவிக்கும் சங்கத்தினர்
மனைவி என்று மாற்றிப் படிக்கவும்

இணைப்புப் படம்
நகைத்து ரசிக்க மட்டும்
நடைமுறைக்கு அல்ல )

No comments: