Sunday, November 2, 2008

மனிதன் என்ற ஒருவன்


விபத்தில் காயம் பட்டு
சாலையில் கிடப்பவரை
பாவப்பட்டுக் கொண்டே
கடந்து செல்கிறோம்

தெருவில் கல்லடிபட்ட நாய்க்காக
இரக்கப்பட்டுக் கொண்டே
இறைச்சிக் கடையில்
வரிசையில் நிற்கிறோம்

பத்தாயிரம் செலவு செய்ய மனமில்லாமல்
முப்பதாயிரம் நன்கொடை கொடுத்து
முதியோர் இல்லத்தில்
சேர்த்து வருகிறோம்

பசியோடு வருபவருக்கு
இல்லையென மறுத்து
பல கோடி காணிக்கையாய்
உண்டியலில் செலுத்தி
புண்ணியம் தேடுகிறோம்

வீடு தாண்டி வெளியே
உள்ள உறவு முறை
தெரியாமலேயே போனதை
பெறுமையாய் பேசுகிறோம்

உங்களுக்குத் தெரியுமா?

முன்பு ஒரு காலத்தில்
மனிதன் என்ற ஒருவன்
இருந்தான் என்று

No comments: