Tuesday, November 18, 2008

கடவுளும்,கந்து வட்டியும்


கந்துவட்டி வசூலித்து
கட்டைப் பஞ்சாயத்தில் காசு சேர்த்து
கவனமாய் பங்கு பிரித்து
காணிக்கையாய் உண்டியலில் செலுத்தி

கவலை மறந்து சிரிக்கிறான் மனிதன்
"பாவம் தொலைந்தது !" என்று

கடவுளும் சேர்ந்து சிரிக்கிறான்
"பாவம் அந்த மனிதன் ?"என்று

No comments: